மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டர் என்னும் நாமம்
பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலான் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்
பரஞ்சோதி முனிவர்
கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோடு அமர்ந்து
பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழி போல்
எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ
திருஞான
சம்பந்தர்
தடம் கொண்டது ஒர் தாமரைப்பொன் முடி தன்மேல்
குடம் கொண்டு அடியார் குளிர்நீர் சுமந்து ஆட்டப்
படம் கொண்டது ஓர் பாம்பு அரை ஆர்த்த பரமன்
இடம் கொண்டு இருந்தான் தன் இடைமருது ஈதோ
மின் காட்டும் கொடி மருங்கில் உமையாட்கு என்றும்
விருப்பவன் காண் பொருப்பு வலிச் சிலைக் கையோன் காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி
தருமிக்கு அருளினான் காண்
பொன் காட்டக் கடிக் கொன்றை மருங்கே நின்ற
புனக்காந்தள் கைக் காட்டக்கண்டு வண்டு
தென் காட்டும் செழும் புறவின் திருப்புத்தூரில்
திருத்தளியான் காண் அவன் என் சிந்தையானே