மாணிக்கவாசகர்
மன்னுமாமலை மகேந்திரமதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும் - திருவாசகம்
  திருமூல
  நாயனார்
முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதியது விரும்பாரன்றே
  சேக்கிழார்
மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டர் என்னும் நாமம்
பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலான் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்
  பரஞ்சோதி முனிவர்
கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோடு அமர்ந்து
பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழி போல்
எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ
   திருஞான
  சம்பந்தர்
தடம் கொண்டது ஒர் தாமரைப்பொன் முடி தன்மேல்
குடம் கொண்டு அடியார் குளிர்நீர் சுமந்து ஆட்டப்
படம் கொண்டது ஓர் பாம்பு அரை ஆர்த்த பரமன் 
இடம் கொண்டு இருந்தான் தன் இடைமருது ஈதோ
  சுந்தரமூர்த்தி நாயனார்
நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்
கரையனும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்
தொண்ட னேன்அறி யாமை யறிந்து
கல்லி யல்மனத் தைக்கசி வித்துக்
கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்கநின் றானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே
  அப்பர் சுவாமிகள்
 
சலம்பூவோடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்
உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
உலடலுள்ளூறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன் அதிகைக்கெடில
வீராட்டனத்துறை அம்மானே.
  பரஞ்சோதி முனிவர்
தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை
உண்ட பாலனை அழைத்தது, எலும்பு பெண் உருவாகக்
கண்டதும், மறைக் கதவினைத் திறந்ததும், கன்னித்
தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்
  சம்பந்தர்
செந்தமிழர் தெய்வமறை நாவர் செழுநற்கலை தெரிந்தவவரோ
டந்தமில்கு ணத்தவர்க ளர்ச்சனைகள் செய்யவமர் கின்றவரனூர்
கொந்தலர்பொ ழிற்பழன வேலிகுளிர் தண்புனல்வ ளம்பெருகவே
வெந்திறல்வி ளங்கிவளர் வேதியர்வி ரும்புபதி வீழிநகரே
  அப்பர் சுவாமிகள்
மின் காட்டும் கொடி மருங்கில் உமையாட்கு என்றும்
விருப்பவன் காண் பொருப்பு வலிச் சிலைக் கையோன் காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி
தருமிக்கு அருளினான் காண்
பொன் காட்டக் கடிக் கொன்றை மருங்கே நின்ற
புனக்காந்தள் கைக் காட்டக்கண்டு வண்டு
தென் காட்டும் செழும் புறவின் திருப்புத்தூரில்
திருத்தளியான் காண் அவன் என் சிந்தையானே
  இறையனார்
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே